மூத்த மகள் மாயமானதால் வாணியம்பாடி அருகே மகள்களைக் கொன்று பெற்றோர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

மூத்த மகள் மாயமானதால் வாணியம்பாடி அருகே மகள்களைக் கொன்று பெற்றோர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
Updated on
2 min read

மூத்த மகள் மாயமானதால் விரக்தி அடைந்த பெற்றோர் தங்கள் இரண்டு மகள்களையும் கொலை செய்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக் கான காரணம் குறித்து பெற்றோர் எழுதிய 3 பக்கக் கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:

வேலூர் மாவட்டம் வாணியம் பாடி அருகே உள்ள கட்டாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஸ்ரீநித்யா, பிரவீனா, நிவேதா, அனிதா என 4 மகள்கள். சேகர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பியுள்ளார். மீண்டும் வெளிநாடு செல்லாமல் கூலித் தொழில் செய்து வந்தார்.

இரண்டாவது மகள் பிரவீனா கடந்த ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். குடும்பப் பிரச்சினை காரணமாக தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். மூத்த மகள் ஸ்ரீநித்யாவுக்கும் உறவினர் மகனான பாலச்சந்தர் என்பவருக்கும் கடந்த 50 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் காசோலை மற்றும் தங்கக் காசு பெறுவதற்காக வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரிக்கு கணவருடன் ஸ்ரீநித்யா நேற்று முன்தினம் சென்றார். நேரம் கடந்ததால் கணவரை, ஸ்ரீநித்யா வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

மாலை நேரமாகியும் ஸ்ரீநித்யா வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோர் அந்தக் கல்லூரிக்குச் சென்று பார்த்தபோது அங்குள்ள வகுப்பறையில் ஸ்ரீநித்யா அணிந்திருந்த தாலி மட்டும் இருந்தது. மகள் மாயமானதால் சேகர், விஜயலட்சுமி இருவரும் வேதனையடைந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள நிலத்தில் சேகர், விஜயலட்சுமி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அருகில் மகள்கள் நிவேதா, அனிதாவின் சடலங்கள் கிடந்தன. மகள்களின் கழுத்தை இறுக்கி கொலை செய்த பிறகு கணவனும் மனைவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி வனிதா, ஆய்வாளர் பழனி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அங்கு, சேகர், விஜயலட்சுமி, நிவேதா, அனிதா ஆகியோர் கையெழுத்திட்ட 3 பக்க கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.

அதில், நாங்கள் முழு சம்மதத்துடன் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறோம். மூத்த மகளின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. இதை உறவினர்கள் யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். அவரது நிலை குறித்து போலீஸார் கண்டுபிடித்து தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். இரண்டாவது மகளை எங்களுடன் அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அவரை நல்லபடியாக உறவினர் கள் வாழவைக்க வேண்டும்.

ரமேஷ் என்பவரிடம் ரூ.50 ஆயிரம், ஜாகிரியானிடம் ரூ.50 ஆயிரம், சுரேஷிடம் ரூ.90 ஆயிரம், மல்லகுண்டா ராஜகோபாலிடம் ரூ.27 ஆயிரம், சாமுடியிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளேன். வீட்டில் உள்ள பொருட்களையும் சொத்தையும் விற்று அனை வருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கவும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

இது தொடர்பாக திம்மாம் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மாயமான ஸ்ரீநித்யாவையும் தேடிவருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in