Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் சிவகங்கை அதிமுக மகளிரணி நிர்வாகியிடம் பேசிய சசிகலா

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையைச் சேர்ந்த அதிமுக மகளிரணி நிர்வாகியிடம், ‘கரோனா ஊரடங்கு முடிந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன்,’ என சசிகலா மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்த நிலையில், தற்போது அவர் அதிமுக தொண்டர்களிடம் தொடர்ந்து மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகி வருகிறது. இந்நிலையில் மானாமதுரையைச் சேர்ந்த அதிமுக மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் சண்முகப்பிரியாவிடம் சசிகலா மொபைலில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘தொண்டர்களை கண்கலங்க விடமாட்டேன். நிச்சயமாக வருவேன். ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர் களை சந்திப்பேன். நியாயமாகவும், நல்ல விதமாகவும் கட்சியைக் கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது. அதனால் நான் வந்துவிடுவேன். கவலைப்பட வேண்டாம்,’ என்று பேசியுள்ளார்.

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து, அவர் நிர்வாகி களுடன் பேசி வருவது அதிமுக வட்டாரங்களில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x