Published : 18 Dec 2015 09:08 AM
Last Updated : 18 Dec 2015 09:08 AM

‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்குகிறது. 11வது ஆண்டாக நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.

சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு 50 க்கும் மேலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அருணா சாய்ராம், ஷோபனா, நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரையிலும் நடைபெற உள்ளது. சென்னையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் நிவாரண தொகைகளை கர்நாடக இசை கலைஞர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x