Last Updated : 16 Jun, 2021 06:08 PM

 

Published : 16 Jun 2021 06:08 PM
Last Updated : 16 Jun 2021 06:08 PM

அரசு வழக்கறிஞர்கள் நியமன அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை

தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கண்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளைக்கு 17 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு மே 13-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நியமனம் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2017-ல் உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் 2019-ல் அப்போதைய அரசு அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணை அடிப்படையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமித்து புதிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

எனவே, 2019 அரசாணை அடிப்படையில் நடைபெற்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும், 2017-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாமல் 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 2017-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காணொலி வழியில் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெறுகிறது. இதேபோல் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்காக வழக்கறிஞர்களிடம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, தகுதியானவர்களை தேர்வு செய்யலாம்.

நீதிமன்றப் பணிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு தற்போது தற்காலிக அரசு வழக்கறிஞர்களை நியமித்து உள்ளது. உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களாக தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நீதிமன்றம் நம்புகிறது.

மனு முடிக்கப்படுகிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு 2019-ல் பிறப்பித்த அரசாணயை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு முடிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x