Published : 24 Dec 2015 08:20 AM
Last Updated : 24 Dec 2015 08:20 AM
வெள்ள நிவாரண நிதி வழங்கு வதற்காக கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகளிடம் நிவாரண நிதி வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி வீட்டினர் கணக்கெடுப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக, கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோபாலபுரம் பகுதியில், வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியினை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். அப்போது, திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கும் அதிகாரிகள் சென்றனர். ஆனால், கருணாநிதியின் வீட்டினர், நிவாரண நிதி வேண்டாம், ஆகவே கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்லவே, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT