Published : 14 Jun 2021 02:01 PM
Last Updated : 14 Jun 2021 02:01 PM

வெப்பச் சலனம், தென்மேற்குப் பருவக்காற்று; 3 மாவட்டங்களில் கனமழை; பரவலாக மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி) மாவட்டத்தில் பொது இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 15 அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், தருமபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 16, ஜூன் 17 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 18 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு:

வால்பாறை (கோவை) அவலாஞ்சி (நீலகிரி) தலா 8 செ.மீ., நீலகிரி 7 செ.மீ., கூடலூர் பஜார் (நீலகிரி) 6 செ.மீ., சின்கோனா (கோவை), 5 செ.மீ., பெரியாறு (தேனி) 4 செ.மீ., க்ளென்மோர்கன் (நீலகிரி) 3 செ.மீ., பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2 செ.மீ., உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) போளூர் (திருவண்ணாமலை), தளி (கிருஷ்ணகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூன் 14 ஜூன் 15 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 14 முதல் 16 வரை மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்

ஜூன் 14 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடகா, கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 16 முதல் 18 வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x