Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியர் ஒருவர் நேற்று கரோனா தொற்றால் பாதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டில் பணிபுரியும் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் மருத் துவப் பணியாளர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அவர்கள் சிகிச்சையில் குணமடைந்து மீண்டும் பணியில் தொடர்கின்றனர்.
இந்நிலையில் செவிலியர் எஸ்.மகாராணி(33) என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உடன் பணிபுரிந்த செவிலியர்கள், மருத்துவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT