Published : 25 Dec 2015 09:38 AM
Last Updated : 25 Dec 2015 09:38 AM

நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி: திரிபுரா முதல்வருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக திரிபுரா முதல்வர் ரூ.1 கோடி வழங்கியதற்காக அவருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரிபுரா முதல்வர் மாணிக் சர்காருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக் காக தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய உங்களுக்கு நன்றி தெரி விக்கிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எனது அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாங்கள் கொண் டுள்ள கவலை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x