Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய ஐ.ஜி.யாக ஆனந்த் பிரகாஷ் படோலா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்பு ஐ.ஜி.யாக இருந்த எஸ்.பரமேஷ், இந்திய கடலோரக் காவல் படையின் மேற்கு பிராந்திய கமாண்டராக மாற்றப்பட்டார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் பிரகாஷ், இந்திய கடலோரக் காவல் படை பணியில் 1990-ம் ஆண்டு சேர்ந்தார். கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வழிகாட்டுதல் மற்றும் இயக்கத் துறையில் நிபுணத்துவம் பெற்ற இவர், அமெரிக்க கப்பல் படை ஊழியர்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார்.
உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ், கடலோரக் காவல்படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் தட்ரக்ஷக் விருதை கடந்த ஆண்டு பெற்றார்.
இத்தகவலை பாதுகாப்புத் துறை பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT