Published : 23 Dec 2015 08:22 AM
Last Updated : 23 Dec 2015 08:22 AM
சென்னை ஐஐடி-யில் புதிதாக ரயில்வே ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு ஆய்வுப் பணிகளுடன் ரயில்வே தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பல்வேறு படிப்புகளும் வழங்கப்பட உள்ளன.
ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி.யும் ரயில்வே துறையும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. கூட்டு ஆராய்ச்சி பணிக்காக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில் ரயில்வே ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும்.
இந்த மையத்தில், ரயில்கள், ரயில்வே பாலங்கள், என்ஜின்கள், ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட ரயில்வே உள்கட்டமைப்புகளின் கண்காணிப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.மேலும், ரயில்வே தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளும் இங்கு வழங்கப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்து
ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி யில் சென்னை ஐஐடி-யின் தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி பிரிவு டீன் பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் பேசும்போது, “புதி தாக அமைக்கப்பட உள்ள ரயில்வே ஆராய்ச்சி மையம் மூலமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியில் ரயில்வே துறையுடன் ஐஐடி இணைந்து செயல்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT