Published : 09 Jun 2021 12:39 PM
Last Updated : 09 Jun 2021 12:39 PM

ஹாட் லீக்ஸ்: டூட்டி முடிஞ்சுது... டூர் கெளம்பிட்டாரு!

தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து உதயசூரியனில் போட்டியிட்டவர் கார்த்திகேய சிவசேனாதிபதி. அவர் வெளியூர்க்காரர் என்பதால் அவருக்கான தேர்தல் வேலைகளை ஒருங்கிணைக்க உள்ளுர் திமுக முக்கிய பிரமுகர் ஒருவரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்திருந்தது திமுக தலைமை. தொண்டாமுத்தூர் தனக்குத்தான் என்றிருந்த அந்த பிரமுகரும் ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பம்பரமாய் சுழன்று வேலை பார்ப்பதுபோல் சுற்றிவந்தார். இந்த நிலையில் சேனாதிபதியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு அந்தப் பொறுப்பாளரை ஆளையே காணவில்லையாம். விசாரித்தால், “அவர் மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று சொல்லும் உடன்பிறப்புகள், “தேர்தலின்போது வேலுமணி ‘வெயிட்டாக’ கவனித்ததையும் கையோடு கொண்டு போயிருக்கிறார்” என்று சொல்லி கண் சிமிட்டுகிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x