Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கும் நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த 6-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து அரசு ஆணையிட்டது.

மாநிலம் முழுவதும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி காலை 6 மணி வரை நீீட்டித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 6-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து உள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 13-ம் தேதி வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x