Published : 11 Dec 2015 11:08 AM
Last Updated : 11 Dec 2015 11:08 AM

6 சிங்கப்பூர் செயற்கை கோள்களுடன் டிச.16-ல் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி ராக்கெட்: இஸ்ரோ உயர் அதிகாரி தகவல்

6 சிங்கப்பூர் செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி ரக ராக்கெட் வருகிற 16-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக 14 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. அவற்றில் 3 இந்திய செயற்கை கோள்கள்.

4எஞ்சிய 11 வெளிநாட்டு செயற்கை கோள்கள் ஆகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக தொலைத்தொடர்பு செயற்கை கோளான ஜிசாட்-6-ம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

மொத்த எடை 625 கிலோ

இந்நிலையில், வரும் 16-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் 6 சிங்கப்பூர் செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “அந்த 6 செயற்கை கோள்களின் மொத்த எடை 625 கிலோ ஆகும். அவை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படும். இது ஒரு வர்த்தக ரீதியிலான ஏவுதல் பணி”ஆகும். இவ்வாறு இஸ்ரோ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x