Published : 08 Jun 2021 12:50 PM
Last Updated : 08 Jun 2021 12:50 PM
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் ப.சிதம்பரம் தரப்புக்கும் மோதல் வெடித்தது. சட்டமன்றத் தேர்தலின்போது இது இன்னும் பலமாக எதிரொலித்தது. கூடுதலாக, சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்த கே.ஆர்.ராமசாமியும் அழகிரியுடன் கைகோத்துக் கொண்டார். இந்த நிலையில் இந்த மோதலானது கார்த்தி சிதம்பரம் - கே.ஆர்.ராமசாமி நேரடி மோதலாக உருமாறியது. இந்த யுத்தம் ராமசாமியின் கோட்டையான தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரத்தின் விசுவாசிகள் போட்டிக் கூட்டம் நடத்துமளவுக்கு வளர்ந்து நிற்கும் நிலையில், அடுத்த கட்டமாக தேவகோட்டை நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை மாற்றும் முடிவில் இருந்தார் கார்த்தி சிதம்பரம். இதற்கு செக் வைக்கும் விதமாக கே.ஆர்.ராமசாமியை காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவராக நியமிக்க வைத்துவிட்டார் அழகிரி. இனி கார்த்தி தரப்பு ஏதாவது கொடியைத் தூக்கிப் பிடித்தால் ராமசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டம்கட்டவும் தயங்கமாட்டார் என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT