Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
நாடு முழுவதும் சாலையோரம் வாழும் ஆதரவற்றவர்களைக் கண்டறிந்து கரோனா தடுப்பூசி போட அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில் மதுரையில் சாலையோர ஆதரவற்றோர் பராமரிப்பு நிகழ்ச்சி காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆதரவற்றோருக்கு பழனிவேல், செல்வகுமார், ராஜு, ஜெயசிங், சதீஷ், நாகராஜ், கனகராஜ் ஆகியோர் முடி வெட்டி, முகச் சவரம் செய்து, புத்தாடை, மாஸ்க் அணிவித்தனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர், சாலையோர ஆதரவற்றோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர்கள் ஜெயசிங், முத்துக்குமார், ராஜு, நாகராஜ் ஆகியோர் மனு அளித்தனர். ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT