Last Updated : 06 Jun, 2021 03:13 AM

 

Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM

கரோனாவுக்கு பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறை: மதுரையில் சித்த மருத்துவத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு

பார்க் டவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிகிச்சை மையம்.

மதுரை

தமிழகத்தில் முதல் அலையைவிட, 2-வது அலையால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன், ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிட்டது. ஆக்சிஜன் படுக்கை வசதியை மேம்படுத்தியது போன்ற தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையால் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப் புக்கு சித்தா, ஆயுர்வேதா போன்ற உள்நாட்டு மருத்துவச் சிகிச்சைக்கு மக்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது.

மதுரை பிளாட் புரோமோட்டர்ஸ் அசோசியேஷன் சார்பில், அய் யர் பங்களா பார்க் டவுன் - குலமங்கலம் பிரதான சாலையில் நேரு மேல்நிலைப் பள்ளியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்படுகிறது.

100 படுக்கை வசதிகளைக் கொண்ட இங்கு 24 மணி நேரமும் முறையான கவனிப்பு, இலவச சித்தா மருந்துகளும் வழங்கப் படுகின்றன.

இதுவரை 100-க்கும் மேற் பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சிகிச்சை மையப் பொறுப்பாளர்களும், புரோமோட்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகளுமான வல்லப்பன், கந்தசாமி, முத்துவேல், மாணிக்கம் ஆகியோர் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறி யதாவது: அமைச்சர் பி. மூர்த்தி அறிவுறுத்தலின்பேரில் 100 படுக்கைகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை மே 26-ல் தொடங்கினோம். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறு கின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 பேர் முதல் 15 பேர் புதிதாக அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 10 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இங்கு சிகிச்சை பெறுவோருக்கு சத்துள்ள உணவு, காய்கறி சூப், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவர் களின் ஆலோசனைகளுடன், நோய் அச்சம் போக்க கவுன்சிலிங்கும் அளிக்கப்படுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் இம்மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மதுரை கப்பலூரில் காமராசர் உறுப்புக் கல்லூரி கோவிட் கேர் சென்டரில், கரோனா பாதித்தவர் களுக்காக பிரத்யேகமாக யோகா இயற்கை முறை சிகிச்சை அளிக் கப்படுகிறது.

இது பற்றி இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அமுதா கூறி யதாவது: தமிழக அரசு சார்பில், இந்த மையம் செயல்படுகிறது. இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு தினமும் காலை, மாலை 10 நிமிடம் சூரியக் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எதிர்ப்பு சக்தியை கூட்ட காலையில் இஞ்சி, மஞ்சள், துளசி, மிளகு, அதிமதுரம் கலந்த பானம் வழங்கப்படுகிறது. தூக்கம் அதிகரிக்க அக்குபிரஷர் மற்றும் ஓமம், துளசி, எழுமிச்சை புல், ஆயில் கலந்த நறுமண சிகிச்சை, பிராணயாமம், மூச்சுப்பயிற்சி, யோகாசனம் போன்ற இயற்கை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இது நல்ல பலனைத் தருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 50 முதல் 75 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 20 பேர் வரை குணமடைந்து திரும் புகின்றனர் என்றார்.

இதற்கிடையில், மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லிகிரேஸ் ஏற்பாட்டில், சித்தா, ஆயுர்வேத மருந்துகள் அடங்கிய இயற்கை முறையிலான கரோனா தடுப்பு பொடி பாக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.

கரோனா பாதித்தவர்கள் 3 நாட்களுக்கு 3 வேளையும், பாதிக்காதவர்கள் முன்னெச் சரிக்கையாக 2 நாட்களுக்கு இரு வேளையும் உணவுக்குப் பின் தேனில் கலந்து சாப்பிட வேண்டும் என, தன்னார்வலர் குழு அறிவுறுத்துகிறது. இந்த மருத்து தபால் மூலமும், நேரிலும் வழங்கப்படுகிறது. 9894191927 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை பதிவிட்டால் அனுப்பி வைக்கப்படும். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இம்மருந்து வழங்கப்பட்டுள்ளது என தன்னார்வலர்கள் தெரிவித் தனர்.

சித்த மருத்துவர்கள் கூறு கையில், தொற்று பாதித்தவர்கள் அலோபதி மருத்துவத்தை நாடினாலும் சித்தா, ஆயுர்வேத சிகிச்சையிலும் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x