Published : 05 Jun 2021 07:52 PM
Last Updated : 05 Jun 2021 07:52 PM

கோயில்கள் சார்பாக 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள்; ஜூன் 14 வரை வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு: கோப்புப்படம்

சென்னை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், திருக்கோயில்கள் சார்பாக ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஜூன் 14 வரை தொடர்ந்து வழங்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 05) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக, பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்குப் போராடி வரும் நிலையில், அவர்களது பசியினைப் போக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் கரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 05.06.2021 வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு ஏற்கெனவே ஆணையிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலம் மேலும் 14.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பொட்டலங்களை நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்குத் தொடர்ந்து வழங்கிடவும், இதனால் தேவைப்படும் கூடுதல் நிதியினை இந்து சமய அறநிலையத்துறையில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து தேவைப்படும் திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x