Published : 04 Jun 2021 12:35 PM
Last Updated : 04 Jun 2021 12:35 PM

ஹாட் லீக்ஸ்: வந்தது அவரால... போனது எவரால?

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆ.ரவிச்சந்திரன். அதிமுக குடும்பப் பின்னணி கொண்டவர் என்பதால் அதிமுக ஆட்சியில் இந்த இடத்தைப் பிடித்தாராம் ரவிச்சந்திரன். அப்படிப்பட்டவர், ஆட்சி மாறியதும் கடந்த 26-ம் தேதி திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) நியமனம் செய்யப்பட்டார். இவரை இந்த இடத்துக்கு சிபாரிசு செய்தவர் அமைச்சர் கே.என்.நேரு என்கிறார்கள். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் கருப்பையாவுக்கும் ரவிச்சந்திரன் ஒருவகையில் உறவினராம். இந்தக் காரணத்தைச் சொல்லி ரவிச்சந்திரனுக்கு சிபாரிசு செய்திருந்தாராம் நேரு. ஆனால், இதைப் பார்த்துவிட்டு அதிர்ந்த திமுக ஆதரவு பிஆர்ஓ-க்கள் சிலர், “நாங்களெல்லாம் கடந்த பத்து வருசமா ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கிறோம். ஆனா நம்ம ஆட்சியில, அதிமுககாரரான ரவிச்சந்திரனுக்கு இத்தனை முக்கியத்துவமா?” என்று தங்களுக்கு நெருங்கிய வட்டத்தில் ஆதங்கத்தைக் கொட்டினார்களாம். இந்த விவகாரம் திருச்சியின் இன்னொரு அமைச்சரான மகேஷ் பொய்யாமொழியின் காதுக்கும் போனதாம். இந்த நிலையில், பதவியேற்று இரண்டே நாளில் ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தின் பிஆர்ஓ-வாக 28-ம் தேதி இரவு இடமாற்றம் செய்யப்பட்டார் ரவிச்சந்திரன்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x