Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

நரிக்குறவர் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை: அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் கூட பெற முடியாமல் தவிப்பு

காரைக்குடி வேடன் நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள்.

காரைக்குடி

காரைக்குடியில் 50 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ரேஷன்கார்டு இல்லாததால், அரசு அறிவித்த நிவாரணத்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

காரைக்குடி வேடன் நகரில் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன.கரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி வீட்டிலேயே முடங் கியதால் உணவுக்கு சிரமப் படுகின்றனர். மேலும் அவர்களில் 50 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகூட இல்லை. இதனால் அரசு அறிவித்த நிவாரணம் ரூ.2 ஆயிரம்கூட பெற முடியவில்லை.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குமார் கூறியதாவது: கடந்த ஆண்டு பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஓராண்டுக்கு மேலாக தொழில் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உணவுப் பொரு ட்கள் வழங்கினர்.

ஆனால், இந்தாண்டு யாரும் உணவு வழங்க முன்வரவில்லை. உணவின்றி சிரமப்படுகிறோம்.

சிலர் உணவுக்காகவும், குழந்தைகளுக்குப் பால், பிஸ்கட் வாங்கவும் பிச்சை எடுக்கின்றனர். மேலும் 50 குடும்பங்கள் ரேஷன்கார் டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றாமல் விட்டுவிட்டோம்.

இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை. தற்போது முதல்வர் அறிவித்துள்ள ரூ.2 ஆயிரத்தைக் கூட வாங்க முடியவில்லை.

அதேபோல் வீடுகளிலேயே குழந்தைகள் பிறப்பதால் பிறப்புச் சான்றும் பெறுவதில்லை. இதனால் எங்கள் ரேஷன்கார்டுகளில் குழந் தைகளின் பெயர்களையும் சேர்க்க முடியவில்லை. அரசு தான் இதற்கு உதவி செய்ய வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x