Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

சென்னையில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் 312 படுக்கைகள் தயார்

சென்னை அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா தொற்றுபரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கருப்புப் பூஞ்சை எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் அவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைநோயை கட்டுப்படுத்த தேவையானநடவடிக்கைகளை மாநில அரசுஎடுத்து வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆம்போடெசிரின்-பி மருந்தை கொள்முதல் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க தனியாக படுக்கைகளை அமைத்து வருகிறது.

அதன்படி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் 120 படுக்கைகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 26 படுக்கைகள், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 படுக்கைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 100படுக்கைகள், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகள் என மொத்தம் சென்னையில் 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் 119 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x