Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குறைந்துவரும் கரோனா தொற்று: 16.3 சதவீதமாக இருந்த பாதிப்பு 7.2 சதவீதமானது

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு மருந்தும், சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று முதல் அலை பரவத் தொடங்கியபோது முதல் உயிரிழப்பு மதுரை அண்ணாநகரில்தான் நிகழ்ந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதனால், தமிழகத்தின் பிற நகரங்களை ஒப்பிடும்போது மக்கள் நெருக்கம் மிகுந்த மதுரையில் முதல் அலை பாதிப்பும், உயிரி ழப்பும் குறைவாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 2-வது அலை பரவத்தொடங்கியது முதலே மதுரையில் பாதிப்பு அதிகரித்து வந்தது. தினமும் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. அரசு தரப்பில் சராசரியாக 15 பேர் இறந்ததாகக் கூறப் பட்டாலும், அதை விட, இறப்பு பல மடங்கு அதிகமாக இருந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பியதால் மருத்துவமனை வாயிலில் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் மூச்சு திணறலால் இறந்த பரிதாபமும் ஏற்பட்டது.

மருத்துவமனைக்குச் செல்லாமல் வீடு களில் சிகிச்சையில் இருந்தவர்களும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. பாதிப்பில் 80 சதவீதம் மாநகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டது. கடந்த மே 21-ம் தேதி மாவட்டத்தில் 1,269 பேருக்கு தொற்று ஏற்பட்டபோது, அதில் 1,039 பேர் மாநகராட்சி வார்டுகளில் கண்டறியப்பட்டனர். அதன்பிறகு தொற்று ஓரளவு குறையத்தொடங்கியது.

மே 24-ம் தேதி 16.3 சதவீதமாக இருந்த கரோனா தொற்று தற்போது 7.2 சதவீதமாக குறைந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:

மாநகராட்சியில் அதிகமாக தொற்று பரவிய வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தொற்றை கட்டுப்படுத்த மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டன.

100 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்களில் மருத்துவர்கள், செவிலியர் அடங்கிய குழுக் களை குடியிருப்புகளுக்கு அனுப்பி அதிக பரிசோதனைகளை நடத்தி, அதன் மூலம் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற வைக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x