இரவு நேரம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குக்கு எதிராக மனு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி

இரவு நேரம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குக்கு எதிராக மனு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
Updated on
1 min read

தமிழகத்தில் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்குக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த தடை விதிக்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் பிறகு கரோனா ஊரடங்கு தொடர்பாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அரசு புதிய அரசாணைகள் பிறப்பித்துள்ளன.

எனவே மனுதாரரின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலான முழு ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அறாட கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மாவட்டங்களிலும் படிப்படியாக கரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஊரடங்கை மக்கள் கடுமையாகக் கடைபிடித்தால் மட்டுமே அதிலிருந்து சீக்கிரம் விலக்கு அளிக்கும் சூழல் ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்குக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in