Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM
பராமரிப்பு பணியின்போது ஏற்படும் மின்தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணைமின் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு மின் விநியோகம் செய்வதற்காக பீடர் எனப்படும் மின்வழித் தடங்கள், மின்மாற்றிகள், மின்விநியோகப் பெட்டிகள், மின்கம்பம், கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், எப்போதும் வெப்பமாக இருக்கும். இதனால், அவற்றில் பழுது ஏற்படாமல் தடுக்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்படுவது வழக்கம். ஒவ்வொரு பகுதியிலும் மாதத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும். அந்த நாளில், குறிப்பிட்ட பகுதியில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். இதுகுறித்த விவரம் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரி விக்கப்படும்.
தற்போது, கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, பராமரிப்பு பணிகளை மின்வாரியம் தற்காலிகமாக நிறுத்தியது.
இந்நிலையில், பராமரிப்புப் பணி யின்போது ஏற்படும் மின்தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பராமரிப்பு நாளில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மின் தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT