Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

தடுப்பூசி முகாம்களில் கட்சியினர் தலையீட்டை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட லக்காபுரத்தில் கடந்த 27-ம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப்பணியாளர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால்,உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பக்கவாட்டு வழியாக திமுக பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

முதல்வரின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு திமுகவினரின் இதுபோன்ற செயல்கள் குந்தகம் விளைவிப்பதுபோல உள்ளது.

எனவே, தடுப்பூசியின் இருப்புக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்கள்தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x