

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2,500-க் கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் அன்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு கடல் பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளை அறுத்து மூழ்கடித்தனர். தொடர்ந்து பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைக் கைப்பற்றி அதில் இருந்த பால்ராஜ், பாண்டி, முனியராஜ், கார்த்தி ஆகிய 4 பேரை சிறைபிடித்தனர்.
இவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மன்னார் மாவட்ட மீன் வளத் துறையினரிடம் ஒப்படைத்த னர். மீன்வளத் துறையினரின் விசாரணைக்குப் பின்னர் 4 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் 4 மீனவர்களையும் ஜனவரி 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.