Published : 31 Dec 2015 07:50 AM
Last Updated : 31 Dec 2015 07:50 AM

தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரம்: விஜயகாந்துடன் முரளிதர ராவ் திடீர் சந்திப்பு

தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற் காக, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தலின்பேரில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்த லுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை களை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக, மக்கள் நலக்கூட்டணி, காங்கிரஸ், பாஜக என பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆர்வம் காட்டி வரு கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக பாஜகவில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

பாஜக தேசிய பொதுச் செயலா ளர் முரளிதர ராவ், சென்னை விரும்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு நேற்று மாலை திடீரென வந்தார். அங்கு விஜயகாந்தை சந்தித்து பேசினார். சுமார் 55 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என முரளிதர ராவ் வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தை தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண், மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தலின் பேரில் விஜய காந்தை முரளிதர ராவ் சந்தித்து பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x