Published : 29 May 2021 08:57 PM
Last Updated : 29 May 2021 08:57 PM

மலேசியாவில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு

மலேசியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மலேசிய அரசு தரப்பில், “ மலேசியவில் கரோனா அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலாக்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 14 தேதிவரை நீடிக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்தே இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,020 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகினர்.

மலேசியாவில் இதுவரை 5,58,534 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மலேசியாவில் இதுவரை 5% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x