Last Updated : 29 May, 2021 02:43 PM

 

Published : 29 May 2021 02:43 PM
Last Updated : 29 May 2021 02:43 PM

புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு: மேலும 21 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 996 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குழந்துள்ளது. மேலும், 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(மே.29) வெளியிட்ட தகவலில்,‘‘ புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 9,118 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 788, காரைக்கால் – 138, ஏனாம் – 34, மாஹே – 36 என மொத்தம் 996 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 16 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 ஆண்டுகள், 9 பெண்கள் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,497 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 896 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 1, 694 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 459 பேரும் என மொத்தமாக 13 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 1,718 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 246 (85.76 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 10 லட்சத்து 34 ஆயிரத்து 12 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 432 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 428 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x