Published : 28 May 2021 06:34 PM
Last Updated : 28 May 2021 06:34 PM

முழு ஊரடங்கு நீட்டிப்பு: 13 வகை பொருட்கள் ரேஷன் கடை மூலம் விநியோகம்: எவை எவைக்கு அனுமதி?

சென்னை

தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. இந்நிலையில், எவை எவைக்கு அனுமதி என்ற விவரத்தையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:

''கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்த அரசு, நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்தில் முழு ஊரடங்கை 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

நடமாடும் மளிகை, காய்கறிகள் அனுமதி

* பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

* மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யலாம்.

* ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

க்க்க்

* பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும்.

* மளிகை, காய்கறிக் கடைகள் நேரடியாகத் திறந்து விற்பனை செய்ய அனுமதி இல்லை. வழக்கமாக உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x