Published : 06 Dec 2015 12:55 PM
Last Updated : 06 Dec 2015 12:55 PM

மீண்டும் வெள்ளம் சூழ்ந்ததால் அம்பத்தூர் பால்பண்ணையில் உற்பத்தி கடும் பாதிப்பு

அம்பத்தூர் பால் பண்ணையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பால் உற்பத்தி மீண்டும் பாதிப்படைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு தினமும் 4 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஐஸ்கிரீம், பால்பவுடர், இனிப்புகள் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கனமழை காரணமாக பால்பண்ணை நிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் மீண்டும் பால் உற்பத்தி தொடங்கியது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக ஆவின் பால் பண்ணையை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், ஊழியர்களால் இயந்திரங்களை இயக்க முடியவில்லை.

இதன் காரணமாக, மீண்டும் கடந்த 3 நாட்களாக பால்பண்ணையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பால் தாராளமாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு பால் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x