Published : 27 May 2021 04:08 PM
Last Updated : 27 May 2021 04:08 PM

ஆசிரியர் தேர்வாணையத் தலைவர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சுப்ரமணியன், நிர்மல்ராஜ், டி.என்.வெங்கடேஷ், நசிமுத்தின்

சென்னை

ஆசிரியர் தேர்வாணையத் தலைவர் உட்பட தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட அதிகாரி அவர் முன்பு வகித்த பதவி விவரம் வருமாறு:

1. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. ஆசிரியர் தேர்வாணையத் தலைவர் எல் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்புச் செயலர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளது டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x