Published : 26 May 2021 08:26 PM
Last Updated : 26 May 2021 08:26 PM

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 3,561 பேருக்கு பாதிப்பு: இன்று 29,717 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்றைய கரோனா தொற்று விவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,45,260.

சென்னையில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,561. இதுவரை மொத்தம் 4,91,197 பேர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,13,221.

அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 42,21,483.

சென்னையில் 3,561 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,203 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 198 தனியார் ஆய்வகங்கள் என 267 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (மே 26) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,10,224.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,68,14,056.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,72,424.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 19,45,260.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 33,764.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,561.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 45,738.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 11,51,192 பேர். பெண்கள் 7,94,030 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 18,713 பேர். பெண்கள் 15,051 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 29,717 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 16,13,221 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 475 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 197 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், 278 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,815 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 6,644 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 347 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 128 பேர்".

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x