Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி வரவு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கடந்த 11-ம் தேதி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையேற்று மே 23-ம் தேதி வரை மொத்தம் ரூ.181 கோடி முதல்வர் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. நன்கொடை அளித்தவர்களுக்கு அரசின் சார்பில் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இணையவழியில் http://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html நன்கொடைகளை தொடர்ந்து அளிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x