அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தாயார் காலமானார்: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ அஞ்சலி

அமைச்சர் பெரியகருப்பனின் தாயார் கருப்பாயி அம்மாள்
அமைச்சர் பெரியகருப்பனின் தாயார் கருப்பாயி அம்மாள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் தாயார் நேற்று காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை திமுக மாவட்டச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பனின் தாயார் கருப்பாயி அம்மாள் (87) திருப்பத்தூரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக இன்று காலை 6 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான அரளிக்கோட்டை கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கார்த்திசிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, எம்எல்ஏ தமிழரசி, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை இறுதி சடங்கிற்கு பிறகு கருப்பாயி அம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in