Published : 23 May 2021 06:29 AM
Last Updated : 23 May 2021 06:29 AM

‘யாஸ்’ புயல் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை 32 சிறப்பு ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

‘யாஸ்’ புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 23-ம் தேதி நாகர்
கோவில் - கொல்கத்தா ஷாலிமார் (02659), 26-ம் தேதி ஷாலிமார் - நாகர்கோவில் (02660), 24-ம் தேதி ஹவுரா - கன்னியாகுமரி (02665), எர்ணாகுளம் - பாட்னா (02643), தின்சுகியா - தாம்பரம் (05930) ஆகியரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - ஹவுரா (02822/02821) சிறப்புரயில்கள் 24-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

25-ம் தேதி சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி (02808), எர்ணாகுளம் - பாட்னா (02643), ஹவுரா - திருச்சி (02664) உட்பட பல்வேறு தடங்களில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x