‘என் மீதான புகார் பொய் என நிரூபிப்பேன்’- நிலோபர் கபீல் விளக்கம்

‘என் மீதான புகார் பொய் என நிரூபிப்பேன்’- நிலோபர் கபீல் விளக்கம்
Updated on
1 min read

முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபீல் மீது ரூ.6 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது உதவியாளர் பிரகாசம், டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் நிலோபர் கபீல் திமுகவுக்கு செல்ல உள்ளதாகவும் அதனால்தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் நிலோபர் கபீலை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியுள்ள நிலோபர் கபீல், ‘‘என் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரகாசம் அவரது பணியை தவறாக
பயன்படுத்தி என் மீது குற்றஞ்சாட்டுகிறார். அவை தவறானது என்பதை விரைவில் நிரூபிப் பேன்” எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in