Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM
திருச்சி என்ஐடி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சித்த மருத் துவத்துறை சார்பில் மூலிகை பானம் வழங்கப்பட்டது.
திருச்சி என்ஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, அங்கு சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜிடம் விவரங்களைக் கேட்டறிந் தார். அப்போது. சித்த மருத்துவத் துறை சார்பில் வழங்கப்பட்ட மூலிகைப் பானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அருந்தினார்.
சிறுவனுக்கு பாராட்டு
முன்னதாக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது அங்கு நின்றிருந்த திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் சண்முகப்பிரியன்(11) என்ற சிறுவன் கரோனா நிவாரண நிதியாக ரூ2,500-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அந்த சிறுவனை முதல்வர் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT