Last Updated : 21 May, 2021 11:19 AM

 

Published : 21 May 2021 11:19 AM
Last Updated : 21 May 2021 11:19 AM

புதுச்சேரியில் 1,702 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 26 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,702 பேர் கரோான தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மே 21) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 9,043 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,340, காரைக்காலில் 249, ஏனாமில் 76, மாஹேவில் 37 என, மொத்தம் 1,702 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 22 பேர், காரைக்காலில் 4 பேர் என, 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 93 ஆயிரத்து 167 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,106 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15,830 பேரும் என, மொத்தம் 17 ஆயிரத்து 936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று அதிகபட்சமாக 2,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 936 (79.36 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 9 லட்சத்து 62 ஆயிரத்து 501 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 423 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 975 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x