Published : 17 May 2021 12:50 PM
Last Updated : 17 May 2021 12:50 PM

ஹாட் லீக்ஸ்: வாரியம் கேட்கும் அன்சாரி க்ரூப்!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். தொகுதி ஏதும் வழங்கப்படவில்லை என்றபோதும் “திமுக கூட்டணியின் வெற்றிக்காக உழைப்போம்” என அறிவித்து களப்பணியாற்றினார் அன்சாரி. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர்கள், ‘பல கோடி மதிப்புள்ள வஃக்பு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் உள்ளது. அதையெல்லாம் மீட்டுத்தர தமிமுன் அன்சாரி தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்று முஸ்லிம் சமுதாயம் நம்புகிறது. எனவே, மனிதர்களை மதிக்க தெரிந்த இந்த மனிதருக்கு வஃக்பு வாரிய தலைவர் பதவியை வழங்க வேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x