Published : 14 May 2021 09:35 PM
Last Updated : 14 May 2021 09:35 PM

5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; தென்மண்டல ஐஜியாகிறார் டி.எஸ்.அன்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு

திருநெல்வேலி ஆணையராக பதவி வகிக்கும் அன்பு மாற்றப்பட்டு தென்மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி ஏடிஜிபி அந்தஸ்திலிருந்து ஐஜி அந்தஸ்திற்கு குறைக்கப்படுகிறது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்யா ஜெயந்த் குல்கர்னி லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை சரக டிஐஜி ஆக பதவி வகிக்கும் பிரவீன்குமார் அபிநபு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை நகர காவல் ஆணையராக தீபக் தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறை செயலர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை, காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பதவிகளில் நியமித்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x