Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் 80 டன் ஆக்சிஜன் வருகை

தமிழகத்துக்கு முதல்முறையாக மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் வந்தது.

மேற்குவங்கத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜனை, ரயில் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரயில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தண்டையார்பேட்டைக்கு வந்தது.

காலி சிலிண்டர்கள்

சிங்கப்பூரில் இருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், கன்டெய்னர்கள் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தன. தமிழக அரசு அதிகாரிகள் அதைப் பெற்றுக்கொண்டு லாரிகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனா்.

தமிழகத்தில் உற்பத்தியாகும்ஆக்சிஜனை சேமித்து வைக்கபோதிய சிலிண்டர்கள், கன்டெய்னர்கள் இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து 900காலி சிலிண்டர்கள், காலி கன்டெய்னர்கள் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன.அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டு, ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x