கோயில் நிர்வாகம் அறிவித்த ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன அறிவிப்பு தற்காலிகமாக ரத்து: இணை ஆணையர் தகவல்

கோயில் நிர்வாகம் அறிவித்த ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன அறிவிப்பு தற்காலிகமாக ரத்து: இணை ஆணையர் தகவல்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஜீயர்நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலியாக உள்ள 51-வது ஜீயரைநியமனம் செய்வதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கோயில் இணையதளத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஜூன் 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜீயரை கோயில் நிர்வாகம் நியமிக்க எதிர்ப்பு கிளம்பியதுடன், கோயிலில் உள்ள ஸ்தலத்தார்கள்தான் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கோயில் இணைஆணையர் எஸ்.மாரிமுத்து நேற்றுகூறியதாவது:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின்ஜீயர் நியமனம் என்பது கோயில்நிர்வாகத்துக்கு உட்பட்டது. கோயில் நிர்வாகம் மூலம்தான் வழக்கமாக ஜீயர் நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு ஊதியம்உண்டு. ஜீயராக பொறுப்பேற்கும்போதே, கோயில் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு, கோயில் பணியாளராக என் பணிகளை செய்வேன் என கடிதம் கொடுப்பதுதான் நடைமுறையில் உள்ளது. தற்போது நிர்வாக காரணத்துக்காக ஜீயர் நியமனம் குறித்த அறிவிப்புதற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in