Last Updated : 10 May, 2021 03:27 PM

 

Published : 10 May 2021 03:27 PM
Last Updated : 10 May 2021 03:27 PM

புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 1,000-ஐ நெருங்கியது; ஒரே நாளில் 2 இளைஞர்கள் உட்பட 23 பேர் இறப்பு: புதிதாக 1,266 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் புதிதாக 1,266 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும், 2 இளைஞர்கள் உட்பட 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கியுள்ளது.

இது தொடர்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மே. 10) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 5,826 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 1,080, காரைக்கால் - 92, ஏனாம் - 79, மாஹே - 15 என, மொத்தம் 1,266 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 17 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 2 பேர் என, மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 28 வயது மற்றும் 32 வயது இளைஞர்கள் 2 பேர் உட்பட, 11 ஆண்கள், 12 பெண்கள் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 988 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 72 ஆயிரத்து 975 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,078 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,091 பேரும் என மொத்தமாக 14,169 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 818 (79.23 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை, 8 லட்சத்து 65 ஆயிரத்து 447 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 7 லட்சத்து 80 ஆயிரத்து 257 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 319 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x