Published : 12 Dec 2015 08:32 PM
Last Updated : 12 Dec 2015 08:32 PM
வெள்ள நிவாரணத்துக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.25 லட்சம் நிதியளித்துள்ளார்.
தமிழகத்தின் கனமழை பாதிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதி வந்து சேருகிறது. தெலுங்கு திரையுலகம் ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் அங்குள்ள கலையுலகத்தினரிடம் நிவாரண உதவிகளை சேகரித்து வருகிறது. அதை தெலுங்கு நடிகர் ராணா ஒருங்கிணைத்து வருகிறார்.
இந்த அமைப்பு வாயிலாக சென்னை வெள்ள பாதிப்புக்கு ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.23 லட்சத்துக்கான காசோலையும், ரூ.2 லட்சத்துக்கான மருத்துவ பொருட்களும் நிவாரண உதவிக்காக அளித்துள்ளார்.
‘சென்னை கனமழை பாதிப்புக்கு தொடர்ந்து நிதியை சேகரித்து வருகிறோம். இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் அளித்துள்ள நிவாரணத் தொகையும், மருத்துவ உபகரணங்களும் பெரிய உதவியாக இருக்கிறது’’ என்றார் தெலுங்கு நடிகர் ராணா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT