Last Updated : 08 May, 2021 03:39 PM

 

Published : 08 May 2021 03:39 PM
Last Updated : 08 May 2021 03:39 PM

புதுச்சேரியில் 70 ஆயிரத்தை கடந்தது கரோனா; புதிதாக 1,703 பேர் பாதிப்பு: மேலும் 19 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், புதிதாக 1,703 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்டாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (மே.8) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,132 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,355, காரைக்கால் - 171, ஏனாம் – 153, மாஹே- 24 என மொத்தம் 1,703 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 14 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 3 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆண்கள் 11 பேர், பெண்கள் 8 பேர் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.34 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை 76 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 2,057 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11,528 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 13 ஆயிரத்து 585 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று அதிகபட்சமாக 1,177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 552 (79.27 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரத்து 293 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 568 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 78 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x