Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM
மேற்கு வங்க வன்முறையை கண்டித்து கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் செய்த பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வென்று தொடர்ந்து 3-வதுமுறையாக ஆட்சி அமைத்துள்ளது. அங்கு கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் பாஜகவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க வன்முறையைக் கண்டித்து அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், பாஜக எம்.பி. ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா பால் உள்ளிட்டோரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT