Last Updated : 06 May, 2021 02:49 PM

 

Published : 06 May 2021 02:49 PM
Last Updated : 06 May 2021 02:49 PM

புதுச்சேரியில் புதிதாக 1,510 பேருக்கு கரோனா தொற்று: 18 பேர் உயிரிழப்பு; 900-ஐக் கடந்த இறப்பு எண்ணிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,510 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 900-ஐக் கடந்துள்ளது. தற்போது 12,430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று( மே 6) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 7,150 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 1,190, காரைக்கால் - 149, ஏனாம் - 129, மாஹே - 42 பேர் என மொத்தம் 1,510 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 17 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 901 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 66 ஆயிரத்து 627 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,036 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10,394 பேரும் என மொத்தமாக 12,430 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 296 (79.99 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 8 லட்சத்து 31 ஆயிரத்து 923 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சத்து 52 ஆயிரத்து 684 பேருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 731 பேருக்கு (2 தவணை உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x