Published : 06 May 2021 12:06 PM
Last Updated : 06 May 2021 12:06 PM

பொன் ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று: மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை பரவல் அதிவேகத்துடன் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தொற்று 23000 ஐ தாண்டியது. தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் தொற்றுப்பரவல் இரண்டாம் அலை அதிகரிக்க ஆரம்பித்ததிலிருந்து தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை குறையவில்லை. சென்னையிலும் இதுவரை வரலாறு காணாத அளவில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.

தொற்று பரவல் இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது. ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. படுக்கைகள் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. தொற்றுப்பரவலுக்கு பல அரசியல் கட்சியினர் பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் பிரச்சாரம் முடிந்த சில நாட்களில் தொற்றுப்பரவலுக்கு ஆளாகினர்.

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோல்வி அடைந்தார். அவருக்கு தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு கரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானதை அடுத்து மதுரை அரசு பொதுமருத்துவமனையில் பொன் ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பெரிய அளவில் பாதிப்பில்லாமல் லேசான தொற்று உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x