Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

காட்டு யானையை துன்புறுத்திய இளைஞர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்டு திருமூர்த்திமலை, ஈசல் தட்டு, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. திருமூர்த்திமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானையை, அப்பகுதி இளைஞர்கள் கற்களால் தாக்கியும், மரக்கட்டையை எறிந்தும் விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிகழ்வுகளை சிலர் வீடியோவாக எடுத்து பரப்பியுள்ளனர். வலி தாங்க முடியாத யானை பிளிறியபடி, மக்களையும் துரத்துவதைப்போல காட்சிகள் பதிவாகியிருந்தன.

இச்செயலுக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உடுமலை வனச்சரக அலுவலர் தனபால் கூறும்போது, ‘‘வனவிலங்குகளை தாக்குவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். மலைவாழ் மக்களில் சிலரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது, வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. தொடர்புடைய நபர்களின் பெயர், விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது வன உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x