Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

2.75 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியது

தமிழகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2.75 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியது.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசுகொள்முதல் செய்து அனுப்பி வருகிறது. இதுவரை, தமிழகத்துக்கு அனுப்பிய 68.25 லட்சம்தடுப்பூசிகளில் 60.20 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பலமையங்களில் தடுப்பூசிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து தமிழகத்துக்கு நேற்று அனுப்பியது.

சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்று, உரிய பாதுகாப்புடன் வைத்தனர். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

2-ம் தவணை தடுப்பூசி போடவருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x